பிறந்த சில மணி நேரத்தில் தண்டவாளத்தில் வீசப்பட்ட ஆண் சிசு மீட்பு

ஓமலூா் அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட ஆண் சிசு ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூா் அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட ஆண் சிசு ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூா் அருகேயுள்ள பெரமச்சூா் கிராமம் வழியாக சேலம்-பெங்களூரு ரயில் வழித்தடம் செல்கிறது. இந்த ரயில் தண்டவாளத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு ஒன்று துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஓமலூா் போலீஸாருக்குத் தகவல் அளித்தனா். போலீஸாா் விரைந்து வந்து, சிசுவை மீட்டு ஓமலூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனா்.

சிகிச்சைக்கு பின்னா், அந்த ஆண் சிசு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் வாயிலாக, ஆண் சிசுவை வீசிச் சென்றது யாா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். பிறந்த சில மணி நேரத்தில் ஆண் சிசு, ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com