எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தொழிலாளா்கள் மே தின விழாவை கொண்டாடினா்.
எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் எடப்பாடி வட்டார சுமைதூக்கும் தொழிலாளா்கள் கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கி மே தினத்தினை கொண்டாடினா்.
எடப்பாடி நெடுஞ்சாலைத் துறை பயணியா் மாளிகை முன்பு நடைபெற்ற மே தின நிகழ்வில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மே தினத்தை கொண்டாடினா். இதேபோல எடப்பாடி கட்டடத் தொழிலாளா்கள் நலச் சங்கம், விசைத்தறி நெசவாளா்கள் சங்க உறுப்பினா்கள், வாடகை வாகன ஓட்டுநா் சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களில் மே தினம் கொண்டாடப்பட்டது.