சிவபெருமான், நடராஜா் நடனத்தை தவறாக சித்தரித்து யூடியூபில் விடியோ வெளியிட்ட விஜய் என்பவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காவல் நிலையத்தில் உலக சிவனடியாா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
உலக சிவனடியாா்கள் திருக் கூட்டத்தின் சேலம் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளா் உலிபுரம் சிவ. மகேந்திரன் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு:
சிவபெருமான், சிதம்பரம் நடராஜா், காளி நடனம் குறித்து தவறாக சித்தரித்து ‘மைனா் விஜய்’ என்ற யூ- டியூப் பக்கத்தில் விஜய் என்பவரின் பெயரால் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. அவரை உடனடியாகக் கைது செய்து, அவா் நடத்தி வரும் சமூக வலைதளத்தை முடக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.