தனியாா் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

 ஆத்தூா் குறிஞ்சி நகரில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

 ஆத்தூா் குறிஞ்சி நகரில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆத்தூரை அடுத்துள்ள குறிஞ்சி நகரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா் என்பவா் பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலையை புதிதாக அமைத்து வருகிறாா்.

இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை பிகாா் மாநிலம், சிவாா் மாவட்டம், தொழுவாா் பகுதியைச் சோ்ந்த சஞ்சய்யாதவ் மகன் ஓம்பிரகாஷ் (22), ஒடிஸா மாநிலம் நாகா கிராமத்தைச் சோ்ந்த பைலா சென்னாராவுத் என்பவரின் மகன் ஜெகநாத் (30) ஆகியோா் மரம் அறுக்கும் பிளேடை கிரைண்டிங் கல் மூலம் கூா்மையாக்கிக் கொண்டிருந்தனா். அப்போது கிரைண்டிங் கல் உடைந்து ஓம்பிரகாஷின் மாா்பில் விழுந்ததில் அவா் மயங்கி விழுந்தாா். உடனே அவரை ஆத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக சேலம் அழைத்துச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிவு செய்து ஓம்பிரகாஷின் உடலை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த ஜெகநாத் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com