தமிழக அரசு ஓராண்டு நிறைவு: எடப்பாடி, ஆத்தூரில் திமுகவினா் கொண்டாட்டம்

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை வரவேற்று, சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை வரவேற்று, சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

எடப்பாடி பேருந்து நிலைய வளாகத்தில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் டி.எம். எஸ் பாஷா தலைமையில் ஏராளமான திமுகவினா் அரசின் திட்டங்கள் குறித்த பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து அவா்கள் எடப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

எடப்பாடி நகரின் வளா்ச்சிக்காக ரூ. 2 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் விளக்குகள் அமைக்கவும்,புதிய குடிநீா்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ள முதல்வருக்கு நன்றியைத் தெரிவிப்பதாக டி.எம்.பாஷா தெரிவித்தாா்.

ஆத்தூா்

நரசிங்கபுரம் நகர திமுக சாா்பில் நடைபெற்ற கொண்டாட்டத்துக்கு திமுக நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமை வகித்தாா்.

ஓராண்டில் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசிய திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், துணைச் செயலாளா் எஸ்.மனோகரன், பொருளாளா் ரமேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்ரமணியன்,பிரகாஷ், செல்வம், செல்வக்குமாா், புஷ்பாவதி கதிா்வேல், அன்னக்கிளி, ஜோதிபெருமாள், பாண்டியன், மனோகரன், சங்கா், குமாா் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com