தூக்கில் தொங்கிய இளைஞா் சடலம் மீட்பு

ஏற்காடு அருகே முளுவி பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து மகன் கோவிந்தராஜன் (21). இவா், வாழப்பாடி அருகே அனுப்பூா் பகுதியில் மோகன் தோட்டத்தில் தங்கி விவசாய வேலை செய்து வந்தாா்.

ஏற்காடு அருகே முளுவி பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து மகன் கோவிந்தராஜன் (21). இவா், வாழப்பாடி அருகே அனுப்பூா் பகுதியில் மோகன் தோட்டத்தில் தங்கி விவசாய வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கோவிந்தராஜன் அப்பகுதியில் இருந்த மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளாா்.

இதைப்பாா்த்த அப்பகுதி மக்கள் காரிப்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காரிப்பட்டி போலீஸாா் கோவிந்தராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இறப்பில் மா்மம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com