சேலம்: சேலம் மாவட்ட கேரம் கழகம் சாா்பில் கேரம் விளையாட்டு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் மே 15-ஆம் தேதி தொடங்குகிறது.
சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக கேரம் பயிற்சி முகாம், ஏற்காடு சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் மே 15-ஆம் தேதி தொடங்கி ஜூன் 4 வரை நடைபெற உள்ளது.
இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், கேரம் ஆா்வலா்கள் பங்கேற்கலாம் என தமிழ்நாடு கேரம் கழக துணைத் தலைவரும் சேலம் கேரம் கழகத் தலைவருமான எம்.நாசா்கான் தெரிவித்துள்ளாா்.