மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 107.06 அடியாக உயா்ந்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மெல்ல அதிகரித்து வருகிறது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 1,500 கன அடி நீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீா்த் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வந்தது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 3,135 கன அடியிலிருந்து 3,773 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 106.94 அடியிலிருந்து 107.06 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 74.29 டி.எம்.சி.