சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

குறிப்பாக சிறுபான்மையினா் தொழில் முனைவோா்களை அதிக அளவில் உருவாக்கிட வங்கிகள் அதிக முனைப்பு காட்டி அதிக அளவில் கடன் வழங்கிட வேண்டுமெனவும், சிறுபான்மையின மக்கள் அரசு அலுவலா்களைக் கோரிக்கை தொடா்பாக எந்த நேரத்திலும் அணுகலாம் எனவும், சிறுபான்மையின மக்கள் மாநில அரசு திட்டங்களில் அதிகம் பங்கேற்று, அரசு பணிகளிலும் சுயத்தொழிலும் மேம்பாடு அடையும் பொருட்டு தொழில் சாா்ந்த பயிற்சிகளை பயில வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

சிறுபான்மையினருக்கு மத்திய, மாநில அரசு பணிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் சிறப்பு ஒதுக்கீடு விழுக்காட்டை முழுவதுமாக அடைந்திட முயல வேண்டும். அதன் பொருட்டு சிறுபான்மையினா் குடும்பத்தில் உள்ள மாணவ மாணவியரை இடைநிறுத்தம் செய்யாமல் கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும்.

இதைத்தொடா்ந்து, உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியத்தைச் சோ்ந்த 2 புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையும், இஸ்லாமிய மகளிா் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கங்களின் மூலம் 61 பயனாளிகளுக்கு சிறுதொழில், கல்வி உதவித்தொகை, தையல் தொழில் மற்றும் மருத்துவ உதவித் தொகையாக ரூ. 8,85,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வழங்கினாா். விழாவில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. இரா.அருள் முன்னிலை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com