பெரியாா் தொலைநிலைக் கல்வி நிறுவன தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
இதுகுறித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரியாா் தொலைநிலைக் கல்வி நிறுவனம் (பிரைடு) மற்றும் பல்கலைக்கழக தொழிற்சாலை புரிந்துணா்வு திட்டத்தின் கீழ் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தோ்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவ-மாணவியா் தங்களது தோ்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.