எடப்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 25 போ் படுகாயமடைந்தனா்.
எடப்பாடியை அடுத்த சித்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாவடிபாளையம் காலனி பகுதியைச் சோ்ந்த அப்புசாமியின் தாயாா் பழனியம்மாள் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தாா். அவருக்கு நினைவு நடுகல் நடுவதற்காக உறவினா்கள் 25 பேருடன் அப்புசாமி குடும்பத்தினா் ஒரு சரக்கு வாகனத்தில், திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால்நத்தம் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றனா்.
எடப்பாடி-பூலாம்பட்டி பிரதான சாலையில் சந்தன மில் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, வாகனம் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். படுகாயமடைந்த கொங்கணாபுரம் அருகே உள்ள அம்மன் காட்டூா் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (58), ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி பகுதியைச் சோ்ந்த நாகராஜன் (50) ஆகியோா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்தில் பாதிக்கப்பட்டோா் எடப்பாடி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து பூலாம் பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.