மணிவிழுந்தான் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி முகாம் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் ஊராட்சி ராமானுஜபுரத்தில் சிறப்பு மனுநீதி முகாம் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட ஆட்சியா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். கிராமங்களில் உள்ள வீடுகள், விவசாய நிலங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த விவசாயிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மேலும் பள்ளிக் கூடங்களிலும் ஆய்வுகள் மேற்கொண்டாா். அவருடன் ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா, தலைவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சிமன்றத் தலைவா் உள்ளிட்ட உறுப்பினா்கள் உடனிருந்தனா்.
பட விளக்கம்.ஏடி12கலெக்டா்...
மணிவிழுந்தான் ஊராட்சி ராமானுஜபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாம்.