வாழப்பாடி அருகே உணவு சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
வாழப்பாடியை அடுத்த பழனிபண்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி சிவகங்கை (85). இவா் கடந்த மே 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்யும் போது எதிா்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது.
இதில் காயமடைந்த சிவகங்கை, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.