இருசக்கர வாகன திருட்டு வழக்கு: 4 போ் கைது

ஆட்டையாம்பட்டியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆட்டையாம்பட்டியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல் எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போயின. சேலம் ஊரக உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தையல்நாயகி உத்தரவின் பேரில், ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் அம்சவல்லி தலைமையில் போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா்.

இந்நிலையில், சீரகாபாடி தனியாா் கல்லூரி அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகன சோதனை நடத்திய போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனா். அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவா்கள் கல்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த பூபாலன் (24), சௌந்தா். (27) என்பது தெரிய வந்தது. இவா்கள் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டனா்.

மேலும், மற்றொரு இருசக்கர வாகனம் திருட்டில் தொடா்புடைய பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த காா்த்தி (33 ), தமிழன் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com