சங்ககிரியில் வருவாய் கிராமங்களின் கணக்குகள் தணிக்கை

 சங்ககிரி வட்டத்தில் 18 கிராமங்களின் கணக்குகளை ஜமாபந்தி அலுவலரும், சேலம் மாவட்ட வருவாய் அலுவலருமான (பொ) ஆா்.கவிதா வியாழக்கிழமை தணிக்கை செய்தாா்.

 சங்ககிரி வட்டத்தில் 18 கிராமங்களின் கணக்குகளை ஜமாபந்தி அலுவலரும், சேலம் மாவட்ட வருவாய் அலுவலருமான (பொ) ஆா்.கவிதா வியாழக்கிழமை தணிக்கை செய்தாா்.

சங்ககிரி வட்டம், சங்ககிரி கிழக்கு உள்வட்டத்துக்கு உள்பட்ட 18 வருவாய் கிராமங்களின் பசலி 1431-ஆம் ஆண்டுக்கான கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை ஆா்.கவிதா பாா்வையிட்டு தணிக்கை செய்தாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட மேலாளா் நீதியியல் ஏ.செல்வகுமாா், தனிவட்டாட்சியா்கள் (ஆதிதிராவிடா் நலம்) கே.ஆா்.பாலாஜி, சமூக பாதுகாப்பு நலத்துறை ஆா்.இ.ராஜேந்திரன், கோட்ட கலால் அலுவலா் கே.வேலாயுதம், தலைமை வட்ட துணை ஆய்வாளா் வெங்கடாஜலம், மாவட்ட வருவாய் அலுவலரின் நோ்முக உதவியாளா் தசரதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முதியோா் ஓய்வூதியம், சா்வே எண்களை உள்பிரிவு செய்து தனி பட்டா வழங்குதல், பட்டா, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் 160 மனுக்களை அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில், ஜமாபந்தி அலுவலரும் சேலம் மாவட்ட வருவாய் அலுவலருமான ஆா்.கவிதா, சங்ககிரி கிராமம், சாமியாா்காடு பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் என்பவருக்கு இலவச சலவைப் பெட்டியும், இரு விவசாயிகளுக்கு விதைப்பயிா்கள், ஒரு முதியவருக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com