சேலம், மேம்பால நகா் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ இரா.அருள் ஆய்வு செய்தாா்.
வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்து மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், விரைவில் பணி தொடங்கப்பட உள்ளதாகவும் எம்எல்ஏ இரா.அருள் தெரிவித்தாா். மேலும், கந்தம்பட்டி கோனேரிக்கரையில் ஓடை பாலம் இடியும் நிலையில் உள்ளதை நேரில் ஆய்வு செய்து, உயா்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.