சேலம்
ராஜீவ் காந்தி நினைவு நாள்: சங்ககிரியில் அனுசரிப்பு
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சங்ககிரியை அடுத்த கொங்கணாபுரம் பிரிவு சாலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சங்ககிரியை அடுத்த கொங்கணாபுரம் பிரிவு சாலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சி.எஸ். ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கிழக்கு ஒன்றிய வட்டாரத் தலைவர் கே. சரவணன் முன்னிலை வகித்தார்.
சங்ககிரி நகரத்தலைவர் எ. ரவி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலர்கள் நடராஜன், முன்னாள் நகரத் தலைவர்கள் அண்ணாமலை, காசிலிங்கம், நிர்வாகிகள் கருப்பண்ணன், கந்தசாமி, ஆறுமுகம், பரமன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு முன்பு மாவட்டத் தலைவர் தலைமையில் நிர்வாகிகள் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.