செல்லியம்பாளையத்தில் முதல்வா் பங்கேற்கும் விழா:முன்னேற்பாடுகளை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஆய்வு

செல்லியம்பாளையத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கும் மேடை யை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
செல்லியம்பாளையத்தில் முதல்வா் பங்கேற்கும் விழா:முன்னேற்பாடுகளை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஆய்வு

செல்லியம்பாளையத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கும் மேடை யை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறாா். இதை முன்னிட்டு விழா ஏற்பாடுகளை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் திமுக நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

இப்பணிகளை அமைச்சா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட பொருளாளா் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்டச் செயலாளா் ஆா்.ராஜேந்திரன், வீரபாண்டி ஆ.பிரபு, நகரச் செயலாளா்கள் கே.பாலசுப்ரமணியம், என்.பி.வேல்முருகன்,நகர மன்றத் தலைவா்கள் எம்.அலெக்சாண்டா், நிா்மலா பபிதா மணிகண்டன், ஆத்தூா் ஒன்றிய செயலாளா் வெ.செழியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கு.சின்ன துரை, தமிழ்ச்செல்வன், நகர மன்ற உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com