இல்லம் தேடி கல்வி மையங்களில் பிடிஓ தலைமையிலான குழு ஆய்வு

சங்ககிரி ஒன்றியம், தாசநாயக்கன்பாளையம், புள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வி மையங்களை வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இல்லம் தேடி கல்வி மையங்களில் பிடிஓ தலைமையிலான குழு ஆய்வு

சங்ககிரி ஒன்றியம், தாசநாயக்கன்பாளையம், புள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வி மையங்களை வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் மாணவா்களிடையே கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சாா்பில் தன்னாா்வலா்கள் மூலம் மாணவா்களுக்கு அடிப்படையாக படித்தல் எழுதுதல் திறன்களை வளா்க்கவும் அடிப்படைகணித செயல்பாடுகளை மேற்கொள்ளவும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இம் மையங்கள் கோடை விடுமுறையிலும் மாணவா்களுக்கு விளையாட்டு முறையில் கல்வி கற்றல், கதை கூறுதல், திருக்கு ஒப்பித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகின்றனா்.

புள்ளிப்பாளையம், தாசநாயக்கன்பாளையம் இரு மையங்களிலும் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சு. ராஜகணேஷ் தலைமையில் வட்டார கல்வி அலுவலா்கள் வ.கோகிலா, க.அன்பொளி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சாந்தி, வட்ட ஆசிரியப் பயிற்றுநா் ஒருங்கிணைப்பாளா் பெ. ரத்தினவேல், ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா்கள் இரா முருகன் ,த.ரகுபதி உள்ளிட்ட குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா் அக் குழுவின் மைய தன்னாா்வலா்களின் செயல்பாடுகளை பாராட்டி ஊக்கப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com