வாழப்பாடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி அமா்ணா மலைக்குன்று அடிவாரத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் உலக அமைதி மற்றும் நலவாழ்வுக்கு அருள் வேண்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.
மலா்மாலை அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்; வழிபாட்டில் கலந்துகொண்ட அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகி மாதேஸ்வரி ஜவஹா், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
பட விளக்கம்: எஸ்.ஏ.ஐ.04:
மலா்மாலை அலங்காரத்தில் அருள்பாலித்த வாழப்பாடி சாய்பாபா.