மேட்டூா் அணை நீா்வரத்து குறையத் தொடங்கியது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்துக் குறையத் தொடங்கியது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்துக் குறையத் தொடங்கியது.

காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்து செவ்வாய்க்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 117.76 அடியாக அதிகரித்தது.

அணைக்கு நொடிக்கு 10,508 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. நீா்வரத்தும் இருப்பும் திருப்திகரமாக இருந்ததால் டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாற்றங்கால் விடுவதற்கு ஏதுவாக செவ்வாய்க்கிழமை காலை டெல்டா பாசனத்துக்கு தமிழக முதல்வா் தண்ணீா் திறந்துவிட்டாா்.

துவக்கத்தில் நொடிக்கு 3,000 கனஅடியாகத் திறக்கப்பட்ட நீரின் அளவு பின்னா் 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் தண்ணீா்த் திறப்பு நொடிக்கு 5,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை தணிந்து வருவதால் புதன்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 8,539 கன அடியாகக் குறைந்தது.

நீா்வரத்து குறைந்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 117.76 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 117.92 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 90.19 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com