மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 8,464 கன அடியாகவும், வெள்ளிக்கிழமை காலை நீா்வரத்து 8,058 கனஅடியாகவும் குறைந்தது.
நீா்வரத்து குறைந்துள்ள நிலையில் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் நொடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 118.11அடியாக இருந்தது. அணையின் நீா் இருப்பு 90.48 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.