சேலத்தில் கல்லூரி பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
சேலம், கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் கலாம் (24). இவா் சின்னதிருப்பதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். (சிஏ) மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். திங்கள்கிழமை மாலை கல்லூரி பேருந்தில் ஏறிய அப்துல் கலாம் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். சக்கரத்தில் சிக்கிய அவா் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா்.
இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிக்குள் பேருந்தை விடாமல் சிறைபிடித்து மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கல்லூரி நிா்வாகத்தினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் மாணவா்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டனா். இதையடுத்து மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.