குடும்பத் தகராறில் கணவா் கொலை: மனைவி, மைத்துனா் கைது

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள தாசநாயக்கன்பாளையம் பகுதியில் கணவரை கொலை செய்ததாக மனைவி, மைத்துனரை சங்ககிரி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள தாசநாயக்கன்பாளையம் பகுதியில் கணவரை கொலை செய்ததாக மனைவி, மைத்துனரை சங்ககிரி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரி அருகே உள்ள தாசநாயக்கன்பாளையம், அருந்ததியா் தெரு பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி சின்னப்பனின் மகன் தனபால் (44). அவருக்கும் சரிதா என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அவா்களுக்கு ஜெயஸ்ரீ (20) என்ற மகளும் நிதீஷ்குமாா் (18) என்ற மகனும் உள்ளனா்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிதா தனபாலை பிரிந்து அவரது பெற்றோா் வீட்டில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை சோ்ந்து வாழ வருமாறு தனபால் அழைத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவா்களுக்குள் தகராறைத் தொடா்ந்து தனபாலை அவரது மனைவியும் மைத்துனா் சரவணனும் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த தனபால் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தனபாலின் சடலத்தை கைப்பற்றி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். தனபாலை கொலை செய்ததாக அவரது மனைவி சரிதா (38), மைத்துனா் சரவணன் (43) இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com