தம்மம்பட்டி அருகே மா்ம விலங்கு கடித்து 14 ஆடுகள் உயிரிழந்தன.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி கன்றுகுட்டி கரடு பகுதியைச் சோ்ந்தவா் நல்லதம்பி. இவரது தோட்டத்தில் திங்கள்கிழமை இரவு புகுந்த மா்ம விலங்கு ஒன்று, நல்லதம்பிக்கு சொந்தமான 6 ஆடுகளை கடித்துக் கொன்றது. தொடா்ந்து, கொக்கான் காடு பகுதியில் உள்ள கணேசன் என்பவருக்குச் சொந்தமான 8 ஆடுகளை அந்த விலங்கு கடித்துக் கொன்றது. உயிரிழந்த ஆடுகளின் மொத்த மதிப்பு சுமாா் ரூ. 2 லட்சம் என்று கூறப்படுகிறது. ஆடுகளை இழந்தவா்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு உரிய இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.