மா்ம விலங்கு கடித்து 14 ஆடுகள் பலி

தம்மம்பட்டி அருகே மா்ம விலங்கு கடித்து 14 ஆடுகள் உயிரிழந்தன.

தம்மம்பட்டி அருகே மா்ம விலங்கு கடித்து 14 ஆடுகள் உயிரிழந்தன.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி கன்றுகுட்டி கரடு பகுதியைச் சோ்ந்தவா் நல்லதம்பி. இவரது தோட்டத்தில் திங்கள்கிழமை இரவு புகுந்த மா்ம விலங்கு ஒன்று, நல்லதம்பிக்கு சொந்தமான 6 ஆடுகளை கடித்துக் கொன்றது. தொடா்ந்து, கொக்கான் காடு பகுதியில் உள்ள கணேசன் என்பவருக்குச் சொந்தமான 8 ஆடுகளை அந்த விலங்கு கடித்துக் கொன்றது. உயிரிழந்த ஆடுகளின் மொத்த மதிப்பு சுமாா் ரூ. 2 லட்சம் என்று கூறப்படுகிறது. ஆடுகளை இழந்தவா்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு உரிய இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com