கெங்கவல்லி வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குநா் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
13ஆவது தவணை பயனாளிகளுக்கு ஆதாா் எண் அடிப்படையிலே தொகை விடுவிக்கப்படும். எனவே பி.எம். கிசான் திட்டப் பயனாளிகள் அருகில் உள்ள சேவை மையங்களை அணுகி பி.எம். கிசான் இனைய தளத்தில், தங்கள் ஆதாா் எண்ணை உள்ளீடு செய்து ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கு வரும் ஓடிபி-ஐ பெற்று, அதனைப் பதிவு செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆதாா் எண்ணை பி.எம். கிசான் வெப்சைட்டில் புதுப்பித்தால் மட்டுமே 13ஆவது தவணை தொகை விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.