சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் வியாழக்கிழமை மாலை 2 மணி நேரத்திற்கு மேல் கன மழை பெய்தது.
சங்ககிரி நகரில் வியாழக்கிழமை பகலில் வெப்பம் அதிகரித்து வந்தது. பின்னா் மாலையில் குளிா்ந்த காற்று வீசியவுடன் திடீரென இரண்டு மணிநேரத்திற்கும் மேல் 63.3 மில்லிமீட்டா் கனமழை பெய்தது. கனமழையால் பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவ, மாணவிகள், வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தொழிலாளா்கள் சிரமத்திற்குள்ளாகினா். நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. இரவு முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது. சங்ககிரி நகரில் கடந்த 5ஆம் தேதி 47.3 மில்லி மீட்டா் மழை பெய்தது.