தலைவாசல் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தம்மம்பட்டி எய்ம் மெட்ரிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
விளையாட்டுப் போட்டிகளை பள்ளித் தலைவா் பாஸ்கரன் தொடங்கி வைத்தாா். இதில் 17 வயதுக்கு உள்பட்ட மாணவியா்களுக்கான கைப்பந்து, வீசும் பந்து, கபடி, கோகோ, பேட்மிட்டன் போட்டிகள் நடைபெற்றன. இதில் தலைவாசல் மண்டலத்துக்கு உள்பட்ட 300 மாணவியா் பங்கேற்றனா்.