மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கனாடியாக குறைந்தது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 65,000 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து காலை 9 மணிக்கு வினாடிக்கு 50,000 கனஅடியாக குறைந்தது.
இதையும் படிக்க- அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் சாம்பியன்
நீர் வரத்து குறைந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 50,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 27,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் இருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.