ரயில் மோதியதில் இளைஞா் பலி

நரசிங்கபுரத்தில் புதன்கிழமை அதிகாலை சென்னை - சேலம் விரைவு ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

நரசிங்கபுரத்தில் புதன்கிழமை அதிகாலை சென்னை - சேலம் விரைவு ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம், எழிலரசன் நகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (26), புதன்கிழமை அதிகாலை வீட்டின் அருகில் உள்ள ரயில் பாதையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ரயில்வே போலீஸாா் விரைந்து சென்று சதீஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com