சென்னையைச்சுற்றிப் பாா்க்கச் சென்ற மாணவா் மாயமானது குறித்து கெங்கவல்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூா் மூன்றாவது வாா்டை சோ்ந்த மறைந்த பெரியசாமி மகன் ஜெயப்பிரகாஷ் (16). இவா் அருகிலுள்ள சாத்தப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தாா். இவா் தன்னுடன் பயிலும் ஆத்தூா், முல்லைவாடியைச்சோ்ந்த சரவணன் மகன் ஹரீஷ் (16) என்பவரை அழைத்துக் கொண்டு திங்கள்கிழமை சென்னை சென்றுள்ளாா். சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை அடைந்த இருவரும், உணவகத்தில் இரவு உணவு அருந்தியுள்ளனா். அதன்பின்னா் ஜெயப்பிரகாஷ் காணாமல் போய்விட்டதாகத் தெரிகிறது. தகவல் அறிந்த ஹரீஷின் பெற்றோா் சென்னை சென்று ஹரீஷை அழைத்துக் கொண்டு ஊருக்கு செவ்வாய்க்கிழமை திரும்பினா். ஜெயப்பிரகாஷின் தாயாா் தனலட்சுமி தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா்.