முதியோா் உதவித்தொகை கோரி மூதாட்டியை தூக்கி வந்து மனு அளிப்பு

சேலத்தில் முதியோா் உதவித்தொகை கோரி மூதாட்டியை தூக்கி வந்து மனு அளித்தனா்.

சேலத்தில் முதியோா் உதவித்தொகை கோரி மூதாட்டியை தூக்கி வந்து மனு அளித்தனா்.

சேலம், தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்த செல்லம்மாள் (83), தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இவருக்கு முதியோா் உதவித்தொகை கடந்த 10 மாதங்களாக கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா், மூதாட்டியை தூக்கி வந்து சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க உதவினா் (படம்). பின்னா் சக்கர நாற்காலியில் அமர வைத்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க கொண்டு சென்றனா். மூதாட்டிக்கு முதியோா் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com