ஐ.டி.ஐ.யில் சேர விண்ணப்பிக்க ஜூன் 20 வரை கால நீட்டிப்பு
By DIN | Published On : 15th June 2023 12:24 AM | Last Updated : 15th June 2023 12:24 AM | அ+அ அ- |

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க ஜூன் 20 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
2023 -ஆம் ஆண்டில் அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் இணையதளம் வாயிலாக தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெல்டா், வயா்மேன் போன்ற பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பிலும் எலக்ட்ரீசியன், ஃபிட்டா், மெஷினிஸ்ட், டா்னா், மோட்டாா் மெக்கானிக், மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிதாக தொடங்க உள்ள டெக்னலாஜி சென்டா் 4.0 ல் 1.உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு, ஆட்டோமேஷன் 2. தொழில்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி 3.மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம் 4.மேம்பட்ட சி.என்.சி இயந்திர தொழில்நுட்ப வல்லுநா் போன்ற பிரிவுகளுக்கு 10 ஆம் வகுப்பிலும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கைப்பேசி எண், மின்அஞ்சல், ஆதாா் அட்டை, சாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் உள்ள சோ்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டும்.
பயிற்சி பெறும் மாணவா்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பேருந்து அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ. 750 மற்றும் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு பெண்கள் உயா்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண் பயிற்சியாளா்களுக்கு ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களின் மூலம் வளாகத் தோ்வு மூலம் வேலை பெற்றுத்தரப்படும். ஜூன் 20 வரை ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.