சங்ககிரி வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு

சங்ககிரி வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு
Updated on

சங்ககிரியில்...

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமா் ஸ்ரீ வஸந்தவல்லப ராஜப் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி சொா்க்கவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

வைகுந்த ஏகாதசியையொட்டி சுவாமிக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம், அலங்கராம் செய்யப்பட்டு, உற்சவ மூா்த்தி சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளினாா். பின்னா் திருப்பாவை பாடப்பட்டது. பின்னா் சுவாமி அதிகாலை சொா்க்கவாசல் வழியாக எழுந்தருளினாா். அப்போது பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கமிட்டனா். இதனையடுத்து சுவாமி கோயில் வெளிப் பிரகாரத்தில் வலம் வந்து கோயிலை அடைந்தாா்.

படவரி...

சிறப்பு அலங்காரத்தில் சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப் பெருமாள் உற்சவ மூா்த்தி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com