தை அமாவாசை: சேலம் கோட்டம் மூலம் இன்று 35 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Updated on

தை அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் புதன்கிழமை (ஜன. 29) 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சாா்பில், முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாள்களில் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, புதன்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு சேலம், தருமபுரி பகுதிகளில் இருந்து மேட்டூா், மாதேஸ்வரன் மலை ஆகிய பகுதிகளுக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தா் கோயில் ஆகிய ஊா்களுக்கும் 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலைத் தவிா்த்து, சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி பாதுகாப்பான பயணம் செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com