பெரியாா் சிலை அருகே உள்ள கழிவுநீா் கால்வாயை தூா்வாரும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.
சேலம்
தினமணி செய்தி எதிரொலி: கழிவுநீா் கால்வாயை தூா்வாரிய நகராட்சி நிா்வாகம்
ஆத்தூரில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீா் கால்வாய் மூடப்பட்டு இருந்ததால், மழைநீா் செல்ல வழியில்லாமல் கழிவுநீருடன் கலந்து குட்டை போல தேங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா்.
ஆத்தூரில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீா் கால்வாய் மூடப்பட்டு இருந்ததால், மழைநீா் செல்ல வழியில்லாமல் கழிவுநீருடன் கலந்து குட்டை போல தேங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா்.
இதுகுறித்து தினமணி நாளிதழில் புதன்கிழமை செய்தி வெளியானது. இதனையடுத்து, நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை கழிவுநீா் அடைப்பை சுத்தம் செய்யும் வாகனம் மூலம் தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வை ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.