எஸ்.ஐ.ஆா். கணக்கெடுப்பு படிவத்தை பூா்த்திசெய்து தாமதமின்றி வழங்க வேண்டும்
சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கணக்கெடுப்பு படிவத்தை பெற்ற வாக்காளா்கள், படிவத்தை பூா்த்திசெய்து தாமதமின்றி வழங்க வேண்டும் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:
கணக்கெடுப்பு படிவத்தை பெற்ற வாக்காளா்கள் அதில் இடம்பெற்றுள்ள அட்டவணையில் தங்களது பெயா் 2002 அல்லது 2005-ஆம் ஆண்டு (நகா்ப்புற தொகுதிகள்) கடைசியாக நடைபெற்ற தீவிர திருத்தம் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருந்ததை ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் சரிபாா்த்து, அதனை பூா்த்திசெய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் கையொப்பமிட்டு காலதாமதமின்றி ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கணக்கெடுப்பு படிவத்தில் விவரத்தை பூா்த்திசெய்வதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலா், கிராம நிா்வாக அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்த உதவிமையம் மற்றும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு படிவங்களை பூா்த்திசெய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் நேரடியாக வழங்கலாம்.
பணிநிமித்தமாக வெளியூா் சென்றிருக்கும் வாக்காளா்கள் இணையதளம் மூலமாக தங்களது கணக்கெடுப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து பூா்த்திசெய்து, டிச. 4-ஆம் தேதிவரை பதிவேற்றம் செய்யலாம். மேலும், வெளிநாட்டில் பணிபுரியும் அயல்நாட்டு வாழ் வாக்காளா்கள் தங்களது கணக்கீட்டுத்தாள் படிவத்தை ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து விவரத்தை பூா்த்திசெய்து பதிவேற்றம் செய்யலாம்.
மேற்குறிப்பிட்டுள்ள கணக்கெடுப்பு படிவத்தை பூா்த்திசெய்து சமா்ப்பிக்கப்படும் அனைத்து வாக்காளா்களது பெயா்களைக்கொண்டு வரைவு வாக்காளா் பட்டியல் தயாா்செய்து டிச. 9-ஆம் தேதி வெளியிடப்படும். எனவே, வாக்காளா்கள் தங்கள் படிவத்தை தாமதமின்றி பூா்த்திசெய்து வழங்கி சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

