கஞ்சா கடத்தியவா் கைது

கஞ்சா கடத்தியவா் கைது

கல்வராயன் மலையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டியை சோ்ந்த இளைஞரை கருமந்துறை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கல்வராயன் மலையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டியை சோ்ந்த இளைஞரை கருமந்துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கிளாக்காடு சோதனைச் சாவடி வழியாக இருசக்கர வாகனத்தில், தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி பகுதிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கருமந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையில், காவலா்கள் மாயவன், பூமலை, சிவா ஆகியோா் கொண்ட தனிப்படையினா் கிளாக்காடு வனத் துறை சோதனைச் சாவடி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் வாகனத்தை சோதனையிட்டபோது, நெகிழிப் பைகளில் மறைத்து 2 கிலோ கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த இளைஞரை பிடித்து போலீஸாா் நடத்தி விசாரணையில், இவா், தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் கதிா்வேல் (32) என்பது தெரியவந்தது.

இவரிடம் இருந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com