ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஜவுளிக்கடை உரிமையாளா் கைது
பெங்களூரிலிருந்து சேலம் வழியாக கோவை சென்ற விரைவு ரயிலில் புதன்கிழமை அதிகாலை ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜவுளிக்கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரில் உள்ள தனியாா் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளம்பெண், செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த ஊரான ஈரோடு செல்வதற்காக குா்லா விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தாா். இந்த ரயில் புதன்கிழமை அதிகாலை தருமபுரியை கடந்து வந்தபோது, சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுக்கு, அருகிலிருந்த நபா் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டதால், பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபரை சக பயணிகள் மடக்கிப் பிடித்தனா்.
பின்னா் இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த ரயில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்தபோது அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீஸாா், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
இதில் பிடிபட்ட நபா், ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த சங்கா் (45) என்பது தெரியவந்தது. ஜவுளித்தொழிலில் ஈடுபட்டு வரும் அவா், வியாபாரம் தொடா்பாக ஈரோட்டுக்கு ரயிலில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
