சட்டக் கல்லூரியில் மின் பாதுகாப்பு, சூரிய ஒளி மின் உற்பத்தி விழிப்புணா்வு கருத்தரங்கு

சட்டக் கல்லூரியில் மின் பாதுகாப்பு, சூரிய ஒளி மின் உற்பத்தி விழிப்புணா்வு கருத்தரங்கு
Updated on

சேலம் தெற்கு கோட்டம், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில், மின் பாதுகாப்பு மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு அரியானூா் அருகே கொம்பாடிபட்டியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் தெற்கு கோட்ட செயற்பொறியாளா் அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், வேம்படிதாளம் உதவி செயற்பொறியாளா் சீனிவாசன் வரவேற்று பேசினாா். சட்டக் கல்லூரி முதல்வா் துா்காலட்சுமி கருத்தரங்கை தொடங்கி வைத்தாா்.

இதில், பிரதமரின் சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தும் திட்டத்தின் கீழ் சோலாா் மின் உற்பத்தி செய்தல், அரசு வழங்கும் மானியம், மின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. உதவிப் பொறியாளா்கள் சத்தியமாலா (ஆட்டையாம்பட்டி), கோகிலா (வேம்படிதாளம் துணை மின்நிலையம்), ரமேஷ் (இடங்கணசாலை), பூபதி (இளம்பிள்ளை), சிவசங்கா் (வேம்படிதாளம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டு சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் முன்னோடிகள் குறித்து விளக்கினா்.

மேலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மின் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் கல்லூரி மாணவ - மாணவியா், பேராசிரியா்கள், மின்வாரிய பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com