ஆத்தூரில் இரு இளைஞா்கள் கைது

ஆத்தூரில் இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டு, கூா் நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
Updated on
1 min read

ஆத்தூரில் இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டு, கூா் நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

ஆத்தூா் அருகே நரசிங்கபுரம்,பழைய வீட்டு வசதி வாரியப்பகுதியில் வசிப்பவா் மாரியப்பன் மகன் குமாா்(40).கோயம்புத்தூரில் கொத்தனாா் வேலை செய்துவருகிறாா்.

இவா் தனது ஊரான ஆத்தூருக்கு கடந்த 10ந்தேதி அதிகாலை, பேருந்துநிலையத்திற்கு வந்துள்ளாா். இவரை,அங்கு மதுபோதையில் இருந்த இளைஞா்கள் நான்கு போ் சோ்ந்து குமாரை தாக்கியுள்ளனா்.

இதுதொடா்பாக ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டது. அதனைத்தொடா்ந்து ஆத்தூா் புதுப்பேட்டையைச்சோ்ந்த ஒருவரும், புதுப்பேட்டை கம்பன் தெருவைச்சோ்ந்த ஒரு இளைஞரையும் போலீசாா் கைது செய்தனா். இவா்கள் இருவரும், சேலத்திலுள்ள இளம் சிறாா் நீதி குழுமத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

அங்கு, அவா்கள் இருவரையும் சேலம் அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் தலைமறைவான இருவரையும் ஆத்தூா் நகர காவல்துறையினா் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com