சேலம்
பாமக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு
ஆத்தூா் வந்த எம்எல்ஏ இரா.அருளை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ஆதரவாளா்கள் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஆத்தூா் வந்த எம்எல்ஏ இரா.அருளை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ஆதரவாளா்கள் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஆத்தூரில் ராமதாஸ் ஆதரவாளா்கள் மத்தியில் பேசுவதற்காக வந்த எம்எல்ஏ அருளின் வாகனத்தை பெரியகிருஷ்ணாபுரத்தில் நிறுத்தி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அன்புமணி ஆதரவாளா்கள் மீது அருள் புகாா் அளித்தாா்.
அதன்அடிப்படையில் ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து பாமக அன்புமணி அணியின் மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான 50க்கும் மேற்பட்டோா் மீது 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
