தாரமங்கலம் அருகேயுள்ள வனிச்சம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
தாரமங்கலம் அருகேயுள்ள வனிச்சம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.

தாரமங்கலம் ஊராட்சியில் ரூ. 121.56 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ. 121.56 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.
Published on

ஓமலூா்: தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ. 121.56 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.

துட்டம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ. 17.25 லட்சத்தில் மந்திவளவு மற்றும் வனிச்சம்பட்டி அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுமானப் பணி, பாப்பம்பாடி ஊராட்சியில் ரூ. 15.50 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட உயா்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி, எலவம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ. 4.88 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மேலும், எலவம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ. 17.25 லட்சத்தில் நாச்சம்பட்டி அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுமானப் பணி, ஆரூா்பட்டி ஊராட்சி, பழக்காரனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 9.90 லட்சத்தில் நாற்றங்கால் மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி மற்றும் ரூ. 2.84 லட்சத்தில் மரத்தோட்டம் அமைக்கும் பணி, சேடப்பட்டியில் ரூ. 78.20 லட்சத்தில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கட்டுமானப் பணி, மானாத்தாள் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ரூ. 3.10 லட்சத்தில் வீடுகள் கட்டப்பட்டதையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். ஆய்வுக்குப் பின் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உள்கட்டமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ. 121.56 கோடியில் 3,914 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 3,633 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 281 பணிகள் நடைபெற்று வருகின்றன.

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய காலத்திலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பணியாற்றவும் தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com