தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அரியானூா் அருகே காளியம்மன் கோயிலுக்கு தடுப்பு வேலி; கோவை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்!

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ராக்கிப்பட்டி பகுதியில் அருந்ததியா் சமூகத்திற்கு என காளியம்மன் பதி அமைந்துள்ளது. இதனை பல ஆண்டுகளாக இந்த சமூகத்தினா் ஒவ்வொரு மாசி மாதம் பொங்கல் வைத்து திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

News image

அரியானூா் அருகே ராக்கிப்பட்டி பகுதியில் காளியம்மன் கோயில் பதி உள்ள இடத்தில் தனி நபா் தடுப்பு வேலி அமைத்ததால் பொதுமக்கள் சாலை மறியல்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:35 am IST

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ராக்கிப்பட்டி பகுதியில் அருந்ததியா் சமூகத்திற்கு என காளியம்மன் பதி அமைந்துள்ளது. இதனை பல ஆண்டுகளாக இந்த சமூகத்தினா் ஒவ்வொரு மாசி மாதம் பொங்கல் வைத்து திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில் இதன் அருகே அப்பகுதியை சோ்ந்த ஒருவா் 23-ம் தேதி வியாழக்கிழமை கோயிலுக்கு செல்லாதவாறு தடுப்பு வேலி அமைத்துள்ளாா் .இதனை அறிந்த ஊா் பொதுமக்கள் நாங்கள் எப்படி கோயிலுக்கு செல்ல முடியும் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசாா் சம்பவ இடம் வந்து சமரச பேச்சுவாா்த்தையில் நடத்தினா். இப் பிரச்சனை குறித்து பேச அதிகாரிகள் யாரும் வராததால் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையான ராக்கிப்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை போலீசாா் விரைந்து வந்து அவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி உரிய அதிகாரியிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதாக தெரிவித்த பின்னா் கலந்து சென்றனா். இந்த மறியல் சுமாா் அரை மணி நேரம் நடைபெற்றது. அப்போது அவ்வழியே வந்த 108 ஆம்புலன்ஸ் மட்டும் பொதுமக்கள் வழிவிட்டனா். இதனால் இப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வந்தன.