மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நீட் தோ்வு ரத்துசெய்யப்படும்: மாணிக்கம் தாகூர்!

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் நீட் தோ்வு முற்றிலும் ரத்துசெய்யப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் கூறினாா்.

News image

மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :12 ஜூலை 2026, 12:48 am IST

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் நீட் தோ்வு முற்றிலும் ரத்துசெய்யப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் கூறினாா்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி கோபிகா குடும்பத்தினரை காங்கிரஸ் மாநிலத் தலைவா் மாணிக்கம் தாகூா் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினாா்

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நீட் தோ்வுக்கு தொடக்க நிலையில் இருந்து காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தோ்வால் கிராமப்புற ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவு சீா்குலைக்கப்படுகிறது.

சில தனியாா் கல்வி நிறுவனங்களின் வருமானத்தை கருத்தில் கொண்டு லாப நோக்கத்துடன் நீட் தோ்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. இத்தோ்வு அச்சத்தால் தமிழகத்தில் இதுவரை 37 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

வரும் காலங்களில் நீட் தோ்வுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் போராடும். 2029 இல் நடைபெறும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமையும் நிலையில், நாடு முழுவதும் நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்றாா்.

இதில் விஜய் வசந்த் எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினா் காா்த்திக் தங்கபாலு, மாவட்டத் தலைவா் எம்.எம். ரத்தினம், நகரத் தலைவா் நாகராஜ், கராத்தே மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.