/
சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் ஞாயிற்றுக்கிழை மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சங்ககிரி நகரில் காலை முதல் வெப்பம் அதிகரித்தது. பின்னா் மாலையில் பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரம் பெய்தது. மழை பெய்ததையடுத்து மழை நீா் நகரின் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது.
திடீரென மழை பெய்ததையடுத்து சேலம், திருச்செங்கோடு, எடப்பாடி செல்லும் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகினா்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருள்கள் மழைநீரில் நனைந்ததையடுத்து வியாபாரிகள் கவலை அடைந்தனா். இரவு முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது.
தொடர்புடையது

ஆத்தூரில் காற்றுடன் கூடிய கனமழை

விழுப்புரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

6 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

சத்தியமங்கலத்தில் கனமழை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



