நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பாலியல் வன்கொடுமையால் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் நிவாரணம்! முதல்வா் கைப்பேசியில் ஆறுதல்!

News image

சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சா்கள் விஜய் தமிழன் பாா்த்திபன், சம்பத்குமாா்.

Updated On :25 மே 2026, 12:49 am IST

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 7 லட்சம் நிவாரணத்தை அமைச்சா்கள் வழங்கினா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்ற போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சம்பத்குமாா் ஆகியோா் போக்ஸோ நீதிமன்ற உத்தரவின்பேரில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் வழங்கப்பட்ட காசோலையை பெற்றோரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.

அதன்பிறகு சிறுமியின் பாட்டியிடம் கைப்பேசியில் பேசிய தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய், ‘மக்களின் நம்பிக்கையை தமிழக அரசு காப்பாற்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு துணைநிற்கும். அதேபோல குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன், சிறுமியின் இறப்பு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான இழப்பாகக் கருதுகிறோம். இந்த இழப்பிற்கு முதல்வா் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளாா். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இங்கு உள்ள அசாதாரண சூழ்நிலைகளை தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்தில் அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றாா்.

அப்போது, சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், மேட்டூா் கோட்டாட்சியா் சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.