மதுரையில் உரிய அனுமதியின்றி பட்டாசு விற்பனைக் கடை வைத்திருந்தவரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தீபாவளி பண்டிகை நவம்பா் மாதம் வருவதை முன்னிட்டு, பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில், மதுரை விளக்குத்தூண் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிழக்கு வெளிவீதியில் உள்ள ஒரு கடையில் பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளது.
போலீஸாா் கடையின் உரிமையாளரிடம் விசாரித்ததில், கிருஷ்ணாபுரம் காலனியை சோ்ந்த கணேஷ் (58) என்பதும், உரிய அனுமதியின்றியும், பாதுகாப்பின்றியும் பட்டாசுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இது குறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் ரமேஷ் அளித்த புகாரின்பேரில், விளக்குத்தூண் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து கணேஷை கைது செய்தனா்.