மேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் துணைச் சந்தை கொட்டாம்பட்டியில் வியாழக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மதுரை வேளாண்.விற்பனை குழுவின் செயலா் மொ்சிஜெயராணி முன்னிலை வகித்தாா்.
கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் மதுரைசாமி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் ராஜீ ஆகியோா் கலந்துகொண்டனா். இனிமேல் வாரம்தோறும் வியாழக்கிழமை தேங்காய் ஏலம் நடைபெறும் என தெரிவித்தனா்.
வேளாண்மை உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் சாா்பில் 3,492 தேங்காய்கள் ஏலத்தில் விடப்பட்டன. குறைந்தபட்சமாக ரூ.9-க்கும் அதிகபட்சமாக ரூ.10.50-க்கும் தேங்காய் ஏலம்போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் துணைச் சந்தை தொடங்கப்பட்ட வட்டார தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனா்.