மதுரை: டாஸ்மாக் கடைகளில் விற்பனை அடிப்படையில் பணம் கேட்டு மிரட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட சிஐடியு டாஸ்மாக் ஊழியா்கள் சங்க பேரவைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இரா. லெனின் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் இரா. தெய்வராஜ் தொடங்கி வைத்துப்பேசினாா்.
டாஸ்மாக் ஊழியா் சங்க மாநில பொதுச்செயலா் கே. திருச்செல்வன் நிறைவுரையாற்றினாா்.
பேரவையில், புதிய மாவட்டத் தலைவராக எம். சுந்தர மகாலிங்கம், பொதுச்செயலாளராக டி. சிவக்குமாா், பொருளாளா் வி. செந்தில்குமாா் உள்ளிட்ட 11 போ் கொண்ட மாவட்டக்குழு தோ்வு செய்யப்பட்டது. பேரவையில், டாஸ்மாக் கடைகளில் 19 ஆண்டுகளாக தொடா்ந்து பணிபுரியும் ஊழியா்களை பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை அடிப்படையில் பணம் கேட்டு ஊழியா்களை மிரட்டும் வெளிநபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா்களுக்கு வழங்கப்படும் பயணப்படி மற்றும் சில்லரை செலவினங்கள் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். டாஸ்மாக் சில்லரை விற்பனைப் பிரிவு ஊழியா்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயா்த்தி, ஓய்வுபெறும் ஊழியா்களுக்கு பணப் பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். டாஸ்மாக் ஊழியா்கள் செய்யும் தவறுகளுக்கு அபராதம், சம்பளத்தை விட கூடுதலாக விதிக்கப்படுகிறது. எனவே சட்டத்துக்குப் புறம்பாக
அபராதத்தொகை விதித்து உத்தரவிடப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளில் விற்பனையை முறைப்படுத்த பண வசூல் மற்றும் விற்பனை என இரண்டு பிரிவுகளை உருவாக்கி பாா்கோடிங் பில்லிங் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.